September 30, 2007

அம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா


அம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா
குழந்தை பிறந்த பிறகு சூர்யாவின் மனைவி ஜோதிகா முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குப் போகிறார். மும்பையில் அம்மா வீட்டில் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கப் போகிறாராம்.

சூர்யாவை, காதலித்து கல்யாணமும் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு சமீபத்தில் அழகான Click here for more images பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தியா என்று பெயரிட்டுள்ளனர்.இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குச் செல்லவுள்ளார் ஜோதிகா. அங்கு ஒரு மாதம் தங்கி தாய் வீட்டில் சீராடவுள்ளாராம்.சூர்யா, வாரணம் ஆயிரம் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு ஒரு மாதம் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இந்த கேப்பில்தான் தனது தாய் வீட்டுக்குப் போய் வர விரும்பினார் ஜோதிகா. சூர்யா குடும்பத்தினரும் ஓ.கே. சொல்லி விட்டார்களாம். இதனால் தாய் வீட்டுக்குப் போகும் ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார் ஜோதிகா.சூர்யா அமெரிக்கா கிளம்பியதும், ஜோதிகா மும்பைக்குப் பறக்கிறாராம். ஜோதிகா தனது குழந்தையுடன் வருவதால் ரொம்பவும் மகிழ்ந்துபோயுள்ளனவர் அவரது அக்காவும் நடிகையுமான நக்மாதானாம்.ஜோதிகாவையும், அவரது குழந்தையையும் பார்த்துக் கொள்வதற்காக தனது படப்பிடிப்புகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டாராம் நக்மா. போஜ்புரியில் தற்போது நக்மா பிசியான நடிகை என்பது தெரியும்தானே.தியா பிறந்தபோது சென்னைக்கு வந்து பார்த்து மகிழ்ந்தார் நக்மா. அப்படியே ஜோதிகாவையும், சூர்யாவையும் உரித்து வைத்தது போல இருக்கிறதே குழந்தை என்று சந்தோஷப்பட்டாராம்.நக்மா உள்ளிட்ட ஜோதிகா குடும்பத்தினர் எழுதிக் கொடுத்த பெயர்களில் ஒன்றுதான் தியா. அதையே, சூர்யா குடும்பத்தினர் குழந்தைக்கு வைத்ததால் நக்மா உள்ளிட்டோருக்கு ரொம்ப சந்தோஷமாம்.தங்கையையும், அவரது குழந்தையையும் ஒரு மாதத்திற்கு நன்றாக கவனித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் நக்மா.நல்ல பெரியம்மா!

0 comments: