September 28, 2007

திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ5 லட்சம்- வீரர்களுக்கு சஹாரா ரூ. 25 லட்சம் மதிப்பு வீடுகள்

திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ5 லட்சம்- வீரர்களுக்கு சஹாரா ரூ. 25 லட்சம் மதிப்பு வீடுகள்

வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2007

சென்னை20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த திணேஷ் கார்த்திக்குக்கு ரூ. 5 லட்சம் பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணியில் திணேஷும் இடம் பெற்றிருந்தார். திணேஷுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது.திணேஷுக்கு ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திணேஷின் திறமையையும் அவர் பாராட்டியுள்ளார்.இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சஹாரா நிறுவனம் இந்திய வீரர்கள் 15 பேருக்கும், தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 217 நகரங்களில் உள்ள சஹாரா நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலிருந்து இவற்றை வீரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என சஹாரா அறிவித்துள்ளது.

0 comments: