September 22, 2007

சிறுமியிடம் சில்மிஷம்-52 வயது நபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம்-52 வயது நபர் கைது
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சிதம்பரம்:கிணற்று மேட்டில் குளித்துக்கொண்டிருந்து சிறுமியிடம் சில்மிஷம் செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பு ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(52). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அமுதா(வயது 12), ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.அமுதா தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்று மேட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அண்ணாத்துரைக்கு அமுதாவிடம் சில்மிஷம் செய்தார்.அண்ணாத்துரை செயலை கண்டு மிரண்டு போன அமுதா கூச்சல் போடவே அவர் ஓடிவிட்டார். இது குறித்து அமுதா தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: http://thatstamil.oneindia.in/

0 comments: