October 9, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 25 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 25 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 25 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 10 பேருக்கு 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.இன்று 35 பேருக்கு தண்டனை விவரத்தை நீதிபதி உத்தராபதி அறிவித்தார். 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் வரும் 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும் மற்ற 7 பேருக்கான தண்டனை விவரம் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

0 comments: