October 2, 2007

தமிழகத்தில் 48 மணி நேரம் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 48 மணி நேரம் மழை நீடிக்கும்

சென்னை:தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.அதிகபட்சமாக நேற்று செஞ்சியில் 190 மி.மீ மழையும், ஆலங்காயம் மற்றும் போளூர் பகுதிகளில் 80 மி.மீ மழையும் பெய்துள்ளது.இது தவிர செங்கல்பட்டு, கண்ணூர், மதுராந்தகம், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கோட்டை, சீர்காழி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.மேலும் சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதே போன்று புதுவையிலும் அடுத்த 48 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

0 comments: