October 2, 2007

திமுக அரசை கலைக்க பா.ஜ வலியுறுத்தல்

திமுக அரசை கலைக்க பா.ஜ வலியுறுத்தல்

உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் எதிரொலியாக, தமிழகத்தில் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இன்றைய நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளது. இதன் பிறகும், திமுக அரசு ஆட்சியில் நீடிக்கக்கூடாது.

அதேபோல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவையும் உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

இதை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக செய்யாவிட்டால், நீதித்துறையை அவமதித்த பழி திமுக மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஏற்பட்டு விடும். அதன் விளைவுகளை பிரதமர் மன்மோகன் சிங்தான் சந்திக்க வேண்டிவரும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முடிவு செய்தால் அதை பாரதிய ஜனதா முழுமையாக ஆதரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)

0 comments: